பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து! 10 வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது பற்றி...

கோப்புப்படம்

Published On :

ராணுவ வாகனம் விபத்து: ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் வியாழக்கிழமை பலியாகியுள்ளனர்.

டோடா மாவட்டத்தின் பதேர்வா பகுதியில் இன்று பிற்பகலில் 17 ராணுவ வீரர்களுடன் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

பதேர்வா - சாம்பா செல்லும் சாலையில் கானி டாப் என்ற பகுதியில் 200 அடி பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 13 வீரர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 6 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், காயமடைந்த 7 வீரர்கள் மேல்சிகிச்சைக்காக உதாம்பூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் விரைந்துச் சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியரசு தினத்தையொட்டி ஜம்மு - காஷ்மீர் பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Army vehicle accident in Jammu and Kashmir! 10 soldiers killed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.