மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மழை குறுக்கீடு: ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து...

News image

அரைசதம் அடித்த ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன். - படம்: பிடிஐ

Updated On :25 பிப்ரவரி 2026, 12:33 pm

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 527 ரன்கள் குவித்துள்ளது.

இரண்டாம் நாளான இன்று மாலை 3.50 மணிக்கு போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பின்னர் மழையின் காரணமாக இந்த நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ரஞ்சி கோப்பைக்கு இறுதிக்கு 67 ஆண்டுகளில் முதல்முறையாக வந்திருக்கும் ஜம்மு காஷ்மீர் அணி கர்நாடகத்துக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் நாளில் 284/2 ரன்கள் குவித்தது. சதமடித்த சுபம் பண்டிர் 121 ரன்களுக்கு இரண்டாம் நாளில் ஆட்டமிழந்தார்.

பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாத்வான் 70 மற்றும் அப்துல் சமாத் 61 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்கள்.

தற்போது, களத்தில் சாஹில் லோத்ரா 57, அபித் முஷ்டக் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

கர்நாடக அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Summary

Rain interruption: Jammu and Kashmir accumulates 527 runs in Rajni Triphy Final second day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.