எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மழை குறுக்கீடு: ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து...

News image
அரைசதம் அடித்த ஜம்மு காஷ்மீர் அணியின் கேப்டன்.- படம்: பிடிஐ
Updated On :25 பிப்ரவரி 2026, 12:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 527 ரன்கள் குவித்துள்ளது.

இரண்டாம் நாளான இன்று மாலை 3.50 மணிக்கு போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பின்னர் மழையின் காரணமாக இந்த நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ரஞ்சி கோப்பைக்கு இறுதிக்கு 67 ஆண்டுகளில் முதல்முறையாக வந்திருக்கும் ஜம்மு காஷ்மீர் அணி கர்நாடகத்துக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் நாளில் 284/2 ரன்கள் குவித்தது. சதமடித்த சுபம் பண்டிர் 121 ரன்களுக்கு இரண்டாம் நாளில் ஆட்டமிழந்தார்.

பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாத்வான் 70 மற்றும் அப்துல் சமாத் 61 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்கள்.

தற்போது, களத்தில் சாஹில் லோத்ரா 57, அபித் முஷ்டக் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

கர்நாடக அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.