செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை தோல்வியினால் பாகிஸ்தான் அணி கேப்டனின் குடும்பம் இழிவுப்படுத்தப்படுவது குறித்து...

Pakistan's captain Salman Ali Agha reacts in the field during the T20 World Cup cricket match between Netherlands and Pakistan in Colombo, Sri Lanka, Saturday,

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா. - படம்: ஏபி

Published On :

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோல்வியுற்றது.

இந்தக் காரணத்தினால், அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவையும் அவரது குடும்பத்தையும் தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 166/8 ரன்கள் எடுத்து வென்றது.

ஏற்கெனவே முதல் போட்டி மழையினால் கைவிடவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குரூப் 2-ல் இங்கிலாந்து முன்னேறியதால், மீதமிருக்கும் ஓரிடத்துக்கு மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியுற்றது அந்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது, முக்கியமான போட்டியிலும் தோல்வியுற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.

அணியின் கேப்டன் சல்மா அகாவையும் அவரது மகன், மனைவியையும் குறிவைத்து சமூக வலைதளத்தில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து சல்மான் அகா தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னையும் எனது மகனையும் கொச்சைப்படுத்துவதால் உங்களுக்கு உலகக் கோப்பை கிடைக்கப்போவதில்லை பாகிஸ்தான் ரசிகர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Pakistani fans target Salman Agha's wife and son after heartbreaking loss to England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.