நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சினால் மூன்றாவது டெஸ்ட்டிலும் தடுமாறும் பாகிஸ்தான் அணி குறித்து...

England's Ollie Robinson celebrates, only for the wicket to be overturned on appeal, during day one of the third cricket test match between England and Pakistan, at Edgbaston, in Birmingham, England, Wednesday, Sept. 9, 2026. (Mike Egerton/PA via AP)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆலி ராபின்சன். - படம்: ஏபி

Published On :

இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சினால் மூன்றாவது டெஸ்ட்டிலும் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முதலிரண்டு டெஸ்ட்டுகளில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இதில் கடைசி டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர்களை இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர்கள் சரித்து தள்ளினார்கள். தொடக்க வீரர் சைம் ஆயுப் 10 பந்துகளில் ரன் ஏதுமின்றி டக் அவுட் ஆனார். மற்ற மூன்று வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஆலி ராபின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள். ஜோஷ் டங் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்.

தற்போது, களத்தில் கேப்டன் பாபர் அசாம் 7 ரன்களுடனும் சௌத் ஷகீல் 12 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் எடுத்துள்ளது.

Summary

Edgbaston Test: Pakistan struggling at 48 for 5 against England!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.