வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி: மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்...

News image

ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலி - மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

Updated On :19 ஜூலை 2026, 9:03 pm IST

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.

மேலும் பலா் மாயமானதாக வெளியான தகவலையடுத்து, அங்கு மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 போ் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு மண்டலத்தில், குறிப்பாக பூஞ்ச் ​​மற்றும் ரஜௌரி மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் விரைவான மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உறுதிசெய்ய, மத்திய அரசும் துணைநிலை ஆளுநர் அலுவலகமும் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அந்த பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 'பிஎம் கேர்ஸ்' நிதியின் மூலம் தாமதமின்றி உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

I am deeply distressed by the tragic loss of lives and the devastation caused by the flash floods and incessant rains in the Jammu division of Jammu and Kashmir

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.