இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருவதாக முதல்வர் ஜோசப் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக சதுரங்க நாளையொட்டி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது.
1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
à®à®²à® à®à®¤à¯à®°à®à¯à® நாள௠மà¯à®©à¯à®©à®¿à®à¯à®à¯ à®à®¤à¯à®°à®à¯à®à®¤à¯à®¤à¯ நà¯à®à®¿à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®¤à¯à®¤à¯ வà¯à®°à®°à¯, வà¯à®°à®¾à®à¯à®à®©à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯, பயிறà¯à®à®¿à®¯à®¾à®³à®°à¯à®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à®¤à¯ மனமாரà¯à®¨à¯à®¤ வாழà¯à®¤à¯à®¤à¯à®à®³à¯à®¤à¯ தà¯à®°à®¿à®µà®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®³à¯à®à®¿à®±à¯à®©à¯.
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 20, 2026
à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯à®¯à¯ à®à®¤à®¿à® à®à®£à¯à®£à®¿à®à¯à®à¯à®¯à®¿à®²à®¾à®© à®à®³à®®à¯ à®à®¿à®°à®¾à®£à¯à®à¯ மாஸà¯à®à®°à¯à®à®³à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿ தமிழà¯à®¨à®¾à®à¯ à®à®¾à®¤à®©à¯ பà®à¯à®¤à¯à®¤à¯ வரà¯à®à®¿à®±à®¤à¯. 1988 à®à®®à¯ à®à®£à¯à®à¯â¦ pic.twitter.com/CnCvlM6VGU
Summary
Chief Minister Vijay extends wishes on World Chess Day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









