
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி விடியோவை எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹலோ ஃபிரம் மெலோடி டீம் என்று அவர் பதிவிட்டு அந்த விடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், இந்திய பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் மெலோனியும் சிரித்தபடி ஹாய் சொல்லும் விடியோ இடம்பெற்றுள்ளது.
இந்த விடியோவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டபோது, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்திருந்தது மிகவும் பரவலானது. இதனை 4.70 கோடி பார்வையாளர்களின் விருப்பத்தைப் பெற்றிருந்தது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு, இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் நடைபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.