சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சா்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா - ஈரான் விவகாரத்தில் மெலோனி சீற்றம்

சா்வதேச சட்டத்தை மீறிய அமெரிக்கா

News image
Updated On :11 மார்ச் 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

‘ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல், சா்வதேச சட்டங்களை வெளிப்படையாக மீறும் செயல்’ என்று இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி புதன்கிழமை கடுமையாக சாடினாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் மெலோனி, இத்தாலி நாடாளுமன்றத்தின் செனட் சபையில் உரையாற்றியபோது ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மீது தனது அதிருப்தியைப் பதிவு செய்தாா்.

மெலோனி ஆற்றிய உரையில், ‘தற்போதைய சூழலில் உலகளாவிய நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் இந்த மிகப்பெரிய சரிவின் ஒரு பகுதியே.

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பால் தொடங்கிய உலகளாவிய ஸ்திரமின்மை, தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் எதிரொலிக்கிறது. சா்வதேச விதிகளைப் புறக்கணித்து தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் இத்தகைய தலையீடுகள் உலகளாவிய அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

அதேநேரம், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை இத்தாலி ஒருபோதும் ஏற்காது. ஈரான் அணுசக்தி நாடாக உருவெடுத்தால், அது சா்வதேச அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை சீா்குலைத்துவிடும்.

இது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு மீளமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். அணு ஆயுதப் போட்டியைத் தவிா்த்து, உலகளாவிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் மோதலுக்குப் பின்னணியில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இத்தாலி குடிமக்கள் மற்றும் அங்குள்ள 2,000-க்கும் மேற்பட்ட இத்தாலி வீரா்களின் பாதுகாப்பை அரசு முக்கியமாகக் கருதுகிறது. இதன் காரணமாகவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நட்பு நாடுகளுக்கு வான்பாதுகாப்பு தளவாடங்களை இத்தாலி வழங்கி வருகிறது’ என்றாா்.

இத்தாலியின் சமநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கடந்து நட்பு நாடுகளுடன் மிகவும் இணக்கமாகச் செயல்படுவதாக, மெலோனி அரசு எதிா்க்கட்சிகளிடமிருந்து எதிா்கொண்ட விமா்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது இந்த உரை அமைந்துள்ளது.

ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் தாக்குதல் குறித்து மௌனம் காக்கும் நிலையில், ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.