ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

News image
கோப்புப் படம்
Updated On :15 ஜூன் 2024, 7:16 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் 12 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த நிதேஷ் சிங் (19) என்பவர் பாலியல் துன்புறுத்தி, தாக்கியுள்ளார். தாக்கியது மட்டுமின்றி, ”யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன்” என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜூன் 10ஆம் தேதி நிதேஷ் சிங் மீது ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நிதேஷ் சிங் நேற்று (ஜூன் 14) பல்லியா மாவட்டத்தின் ரயில் நிலையத்திற்கு அருகே கைது செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், நிதேஷ் சிங் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.