நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மாணவர் வாக்குமூலம்!

பாட்னாவில் கைது செய்யப்பட்ட மாணவர் அனுராக் யாதவ் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மாணவர் வாக்குமூலம்!
Published on
Updated on
1 min read

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் அனுராக் யாதவ் என்பவர், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுராக் யாதவ் கையொப்பமிட்ட வாக்குமூல கடிதம் என்று இணையத்தில் பரவி வரும் கடிதத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் எனது மாமா மூலம் கிடைத்த வினாத்தாளும், தேர்வின் வினாத்தாளும் ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர் அனுராக்கின் மாமாவான பிகார் டான்பூர் நகர அவையில் பொறியாளராக பணிபுரியும் சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்து மூலம் தான் தேர்வுக்கு முன்னதாகவே விடையுடன் வினாத்தாள் கிடைத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மாணவர்கள் சிலர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்வை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னதாக நீட் தேர்வெழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்து கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தேசிய தேர்வு முகமை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com