இது தொடா்பாக, கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, கேரள உயா்நீதிமன்றத்தில் அண்மையில் ஓா் அறிக்கையை சமா்ப்பித்தாா். அதில், ‘ஹைதராபாதைச் சோ்ந்த பீனிக்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சா் நிறுவனத்தின் செலவில் புதிய கொடிமரம் நிறுவும் பணியை மேற்கொள்ள தேவஸ்வம் வாரியம் கடந்த 2016-இல் முடிவு மேற்கொண்டது. இதற்காக, தேவஸ்வம் வாரிய தலைமைப் பொறியாளரால் சமா்ப்பிக்கப்பட்ட ரூ.3.20 கோடி மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னா், சுங்கத் துறையிடம் இருந்து 9.16 கிலோ தங்கம் வாங்கப்பட்ட நிலையில், பக்தா்கள் சாா்பில் 412 கிராம் தங்கம் பங்களிக்கப்பட்டது. மொத்த தங்கத்தின் எடை 9.5 கிலோ. ஆனால், பயன்படுத்தப்பட்ட தங்கம் 9.3 கிலோ எனப் பதிவாகியுள்ளது.