குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் சிவான் அருகே மற்றொரு பாலம் உடைந்தது!

பிகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது, 2 ஆண்டுகளில் ஐந்தாவது சம்பவம்

News image
பிகாரில் இடிந்து விழுந்த பாலம். (கோப்பிலிருந்து)
Updated On :22 ஜூன் 2024, 12:18 pm

DIN

பிகார் மாநிலம் அராரியா அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில், இன்று சிவான் அருகே மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

பிகார் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராம்கார் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த 100 மீட்டர் பாலம் இடிந்து விழுந்ததாகவும், இது கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும், பாலத்தின் ஒரு பகுதியை தாங்கி நின்றிருந்த தூண் பலமிழந்ததால் இந்த சம்பவம் நேரிட்டதாகவும் சிவான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்மையில், இந்த கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், அதன் தூண் பலவீனமடைந்து, பாலம் இடிந்து விழுந்துள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 18ஆம் தேதி அராரியா பகுதியில் சிக்தி என்ற இடத்தில் இருந்த 182 மீட்டர் பாலம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மத்திய அரசால் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த நிலையிலேயே பாலம் இடிந்து விழுந்தது. பாலம் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு அணுகு சாலைகள் ஏற்படுத்தப்படாமல் இருந்ததால், பாலம் திறக்கப்படுவது தள்ளிப்போன நிலையில், பாலம் திறக்கப்பட்ட பிறகு விபத்து நேரிட்டிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

கடந்த மார்ச் மாதம், கோசி ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த ஆற்றுப் பாலத்தின் மூன்று ஸ்லாப்கள் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். எட்டு பேர் காயமடைந்தனர். இதுபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிகாரில் ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டிருப்பது கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.