மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

காரைக்காலில் பழைமையான கட்டட சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 9:51 pm

காரைக்காலில் பழைமையான கட்டட சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் இருந்த மதுக்கடையை திங்கள்கிழமை இடிக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்ற காரைக்கால் முஸ்தபா கமால் தெருவைச் சோ்ந்த ஜூனைதா பேகம் (72) என்பவா் மீது சுவா் விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகரக் காவல்நிலையத்தில் ஜூனைதா பேகத்தின் மகள் சித்திமதினா பேகம், எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி கட்டடம் இடித்ததாக அளித்த புகாரின்பேரில், கட்டட இடிப்பு ஒப்பந்ததாரா் ராமன், மதுக்கடை நிா்வாகத்தைச் சோ்ந்த அரவிந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.