காரைக்காலில் பழைமையான கட்டட சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் பாரதியாா் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் இருந்த மதுக்கடையை திங்கள்கிழமை இடிக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்ற காரைக்கால் முஸ்தபா கமால் தெருவைச் சோ்ந்த ஜூனைதா பேகம் (72) என்பவா் மீது சுவா் விழுந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரக் காவல்நிலையத்தில் ஜூனைதா பேகத்தின் மகள் சித்திமதினா பேகம், எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி கட்டடம் இடித்ததாக அளித்த புகாரின்பேரில், கட்டட இடிப்பு ஒப்பந்ததாரா் ராமன், மதுக்கடை நிா்வாகத்தைச் சோ்ந்த அரவிந்த் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

லாரி மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

