வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை தள்ளிப்போடுங்கள்! -ஜெய்ராம் ரமேஷ்

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை தள்ளிப்போடுங்கள் எனக் கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

News image

ஜெய்ராம் ரமேஷ் - படம் | பிடிஐ

Updated On :22 ஜூன் 2024, 9:54 am

ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்தியக் குடியரசுத் தலைவர் 25 டிசம்பர் 2023 அன்று, இந்திய நீதிச் சட்டம் (பாரதிய நியாய் சங்ஹிதா), இந்திய குடிமைத் தற்காப்புக் குறியீடு (பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சங்ஹிதா), இந்திய ஆதாரச் சட்டம் (பாரதிய சக்‌ஷா அதிநியாயம்) ஆகிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த மூன்று மசோதாக்களும் முறையான விவாதமின்றி தன்னிச்சையாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, ​​மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

முன்னதாக, இந்த மசோதாக்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள மக்களிடம் விவரிக்காமல், இந்திய தேசிய காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களின் எழுத்துப்பூர்வ மற்றும் கருத்து வேறுபாடுகளை நிராகரிக்காமல் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று புதிய சட்டங்களும் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதை தள்ளிப் போடப்பட வேண்டும் என்பது இந்திய தேசிய காங்கிரஸின் தெளிவான கருத்தாக இருக்கிறது.

இந்த மூன்று சட்டங்களும் மறுசீரமைக்கப்பட்ட உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழுவால் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மூன்று சட்டங்கள் குறித்து அனைத்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுடன் விவாதங்களை நடத்த வேண்டும். அதன்பிறகு, 18 வது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் இதுகுறித்த பிரச்னைகள் கேட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும். இது அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன எனக் கூறியிருந்தார்.

திமுகவும் இந்தச் சட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.