நீட் கருணை மதிப்பெண்: 1500 மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு
நீட் தேர்வு
Published on
Updated on
2 min read

நடந்து முடிந்த நீட் தோ்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1500 பேருக்கு நாளை மறுதேர்வு நடைபெறவிருக்கிறது.

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

சுமார் 10 நாள்களுக்கு முன்னதாக, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த பரபரப்பான நாளில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவை வெளியிட்டிருந்தது. இதுவே மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், இதுவரை நடந்திராத வகையில், 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியது. இது சர்ச்சையான போதுதான், தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் (கருணை) மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது. தோ்வா்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிா்த்து நீட் தோ்வா் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்த ஒரு வெளிப்படையான நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில்தான், நாளை நடைபெறும் நீட் மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி தோ்வில் அவா்கள் பெற்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு எனப்படும் நீட் தேர்வை எழுதியவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதலாக வழங்கியுள்ளது.

நிகழ் கல்வியாண்டில், இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்ற அமா்வு, வெற்றி பெற்ற மாணவா்களின் சோ்க்கையானது நீட் தோ்வு குளறுபடிகள் சாா்ந்த பிற மனுக்கள் மீதான உத்தரவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததால் அதை ரத்து செய்வது உள்பட நீட் தோ்வு குளறுபடிகளுக்கு எதிரான பிற மனுக்கள் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற அமா்வு தெரிவித்துள்ளது.

ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் 6 போ் கருணை மதிப்பெண்கள் மூலம் முழு மதிப்பெண்களான 720-ஐ பெற்றிருந்தனா். தற்போது அவா்களின் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, நீட் தோ்வு 2024-இல் முதலிடம் பிடித்தவா்களின் எண்ணிக்கை 67-லிருந்து 61-ஆக குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com