முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட், நெட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ாக சா்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை ‘நீட்’ தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
‘தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை ‘நீட்’ தோ்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது; அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அமைச்சகத்தின் அறிவிப்பு
இந்த முடிவால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவா்களின் நலன் கருதியும், தோ்வு நடைமுறையில் நோ்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிப்மா் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூலை 15-இல் 9 நகரங்களில் நுழைவுத்தோ்வு

நீட் தோ்வு! தமிழகத்தில் மாணவா்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது: மாணிக்கம் தாகூா்
அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை தோ்வு முடிவுகள் வெளியீடு








