
புது தில்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அவசரநிலை கொண்டு வரப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை, அவைத் தலைவர் ஓம் பிர்லா மக்களவையில் வாசித்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு, மக்களவையில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அவசர நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களையில் மௌனம் செலுத்தப்பட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லா தீர்மானத்தை வாசித்தார். அதில், நாட்டையே சிறையாக மாற்றியது அவசரநிலை. அவசரநிலை என்பது நமது அரசமைப்பின் மீது தொடக்கப்பட்ட தாக்குதல். நம் நாட்டில் அநியாயம் நிலவிய காலம் அது. அவசரநிலை பிரகடனம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும் கூறினார்.
அவைத்தலைவர் ஓம் பிர்லாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவையிலேயே முழக்கமிட்டனர். அவசர நிலைக்கு எதிரான தீர்மானத்தை அவைத்தலைவர் ஓம் பிர்லா வாசித்ததால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்கம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.