மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து!

மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படுவது குறித்து...

News image
நாடாளுமன்றம்- படம் - எக்ஸ்
Updated On :16 மார்ச் 2026, 1:37 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்ற மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நாளை (மார்ச் 17) பிற்பகல் 12 மணிக்கு எம்.பி.க்கள் இடைநீக்க ரத்துக்கான முன்மொழிவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தாக்கல் செய்யவுள்ளார்.

தில்லியில் இன்று (மார்ச் 16) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படடுள்ளது.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவையில் நன்னடத்தையுடன் செயல்படுவார்கள் எனவும் எம்.பி.க்கள் தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப். 2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இதில், பிப்ரவரி 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது ராகுல் காந்தி உரையாற்றும்போது, முப்படைகளின் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எழுதிய புத்தகத்தில் சில வரிகளைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் விமர்சித்தார்.

பின்னர் இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் முதலில் அறிவித்ததைக் குறிப்பிட்டு, ‘அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீசினர்.

இதனால், அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பெயா்களைக் குறிப்பிட்டு அவர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்

காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகியோா் மீது இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.