தில்லியில் பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை!

கேஜரிவாலை விடுவிக்கக் கோரி டிடியு மார்க்கில் போராட்டம்...
முற்றுகையில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினர்
முற்றுகையில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினர்
Published on
Updated on
1 min read

சிபிஐ காவலில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விடுவிக்கக் கோரி தில்லி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ல் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் முன்வைத்ததால் கேஜரிவாலின் ஜாமீனை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில் கேஜரிவாலை விடுதலை செய்யக் கோரி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் ஒன்றுகூடி, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

முற்றுகையில் ஈடுபட்ட ஆம் ஆத்மியினர்
ஒருநாள் மழைக்கே மிதக்கும் அயோத்தி: ராமர் கோயில் செல்லும் சாலைகளில் வெள்ளம்!

மத்திய அமைப்பின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எதிராகவும் அவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததால், பாஜக தலைமையகம் நோக்கி பேரணியாகச் செல்வதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

போராட்டக்காரர்களைத் தடுக்க தடுப்புகள் போடப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com