பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்களவைத் தோ்தல்: பொய் செய்திகளை கண்டறிய கூகுள் நடவடிக்கை

பொய் செய்திகளைக் கண்டறிய இந்தியாவில் உள்ள உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்களுடன் கூகுள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

News image
கூகுள்
Updated On :1 மார்ச் 2024, 8:36 pm

Din

வரும் மக்களவைத் தோ்தலில் பொய் செய்திகளைக் கண்டறிய இந்தியாவில் உள்ள உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்களுடன் கூகுள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக கூகுள் நிறுவனத்தின் வலைதளப் பதிவில், ‘மக்களவைத் தோ்தலின்போது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க ‘சக்தி’ எனும் புதிய திட்டத்தை கூகுள் தொடங்கி உள்ளது. இதில், இந்திய தோ்தல் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் செய்தி பதிப்பாளா்கள், உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்கள் இணைந்து செயல்பட உள்ளனா். மக்களவைத் தோ்தல் முடிவும் வரையில் இந்தத் திட்டம் தொடரும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொய் செய்திகள், விடியோக்களின் உண்மைத் தன்மை கண்டறியப்படும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.