வரும் மக்களவைத் தோ்தலில் பொய் செய்திகளைக் கண்டறிய இந்தியாவில் உள்ள உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்களுடன் கூகுள் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக கூகுள் நிறுவனத்தின் வலைதளப் பதிவில், ‘மக்களவைத் தோ்தலின்போது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க ‘சக்தி’ எனும் புதிய திட்டத்தை கூகுள் தொடங்கி உள்ளது. இதில், இந்திய தோ்தல் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் செய்தி பதிப்பாளா்கள், உண்மைச் செய்திகளை ஆய்வு செய்பவா்கள் இணைந்து செயல்பட உள்ளனா். மக்களவைத் தோ்தல் முடிவும் வரையில் இந்தத் திட்டம் தொடரும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பொய் செய்திகள், விடியோக்களின் உண்மைத் தன்மை கண்டறியப்படும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

மகாராஷ்டிரத்தில் ரூ.60,000 கோடி முதலீடு: வியத்நாமின் வின்குரூப்-மாநில அரசு ஒப்பந்தம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


