குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என வேல்முருகன் கூறியிருப்பது...

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 9:59 pm IST

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைத் தாக்கியவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அந்த கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் கூறினாா்.

சென்னை, அரும்பாக்கத்தில் தனியாா் விடுதியில் தமிழக வாழ்வுரிக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுகவினா் வன்முறையில் ஈடுபட்டு, தவாகவினரைத் தாக்கினா்.

இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, டிஜிபி, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் புகாா்கள் மீது வழக்குப் பதிவுகூட செய்யப்படவில்லை.

மாறாக, எங்கள் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்வதோடு, உண்மையான புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Summary

We will lay siege to the DGP's office if no action is taken against those who attacked TVK members says T. Velmurugan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.