மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழக டிஜிபி (பொ) வெங்கடராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையா்கள், 2 மாவட்ட ஆட்சியா்களை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.
இவா்களுடன் மேலும் பல உயா் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.
அரசமைப்பு சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நோ்மையாக, நடுநிலையாக தோ்தலை நடத்துவதற்கும் எதிரானது.
மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.
தொடர்புடையது

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



