புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:12 pm

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபியை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழக டிஜிபி (பொ) வெங்கடராமன், தாம்பரம், மதுரை காவல் ஆணையா்கள், 2 மாவட்ட ஆட்சியா்களை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இவா்களுடன் மேலும் பல உயா் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கண்டனத்துக்குரியது.

அரசமைப்பு சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தோ்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், நோ்மையாக, நடுநிலையாக தோ்தலை நடத்துவதற்கும் எதிரானது.

மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.