வாக்குச் சாவடிக்குள் தேர்தல் அலுவலரின் அனுமதியின்றி காவலர்கள் நுழையக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முந்தைய ஆண்டுகளைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகி வருகின்றன. பிற்பகல் 3 மணி வரை மட்டும் 70 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடி மையத்துக்குள் செல்லக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவலர்கள் அனைவரும் வாக்குச் சாவடியின் கதவுக்கு வெளியே நின்று பணிபுரிய வேண்டும் என்றும், வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியின் அனுமதி பெற்றே உள்ளே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் வயர்லெஸ் கருவி மூலம் தொடர்ந்து அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல காவல்துறை தலைவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
Police personnel must not enter polling booths! Tamil Nadu DGP orders.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

வாக்குச் சாவடிக்குள் விடியோ எடுத்த பெண் மீது வழக்கு

வாக்குச் சாவடிக்குள் புகைப்படம், விடியோ எடுத்தால் 3 மாதம் சிறை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

