ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

உ.பி.யில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன?

உ.பி.யில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்ன சொல்கிறது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

News image
Updated On :2 மார்ச் 2024, 4:06 pm IST

உத்தரப்பிதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 74 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற 6 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தல், ஆர்எல்டி கட்சிகள் தலா 2 தொகுதிகளையும், எஸ்பிஎஸ்பி, நிஷத் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிலாம் என்று கூறப்படுகிறது.

நாட்டில் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களை அனுப்பும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், எந்த ஒரு தேசியக் கட்சியினரும் மிகப்பெரிய அளவில் விவாதமோ ஆலோசனையோ நடத்தாமல் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாது என்பது நிதர்சனம்தானே.

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற மோடியின் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு, புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

மாநிலத்தில், பாஜகவின் பரப்பை அதிகரிப்பதோடு, கூட்டணி கட்சிகளுக்கும் சில தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது சவாலாகவே இருந்திருக்கும்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான், பாஜகவின் மத்திய தேர்தல் குழுவினர், ஒரு வழியாக, உத்தரப்பிரதேசத்தில் 74 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், ஆறு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அப்னா தளம், ஆர்எல்டி கட்சிகள் தலா 2 தொகுதிகளை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அப்னா தளம் ஐந்து தொகுதிகளைக் கேட்டுள்ளது. எனவே, இரண்டு தொகுதிகளைக் கொடுத்து சமரசம் செய்ய வேண்டியதிருக்கும். எஸ்பிஎஸ்பி, நிஷத் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிலாம் என்று கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டு மோடி அரசில் அமைச்சராக இருந்த அனுப்ரியா படேலுக்கு இரண்டு தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டும் இதேத நிலைதான்.

இந்த தொகுதிகளுடன் மேலும் ஒரு தொகுதியாவது கிடைக்க வேண்டும் என்று அனுப்ரியா நினைக்கிறார். ஆனால், பாஜக கைவிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியிலிருந்து மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்த ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சௌத்ரியும் இரண்டு தொகுதிகளைக் கேட்கிறார். மேலும் ஒரு அமைச்சர் பதவியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.

இதனால், கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் போட்டியிட்ட 78 தொகுதிகளைக் காட்டிலும் குறைவாகவே இந்த முறை போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக 64 தொகுதிகளை வென்றது. எதிர்க்கட்சிகள் 15 தொகுதிகளை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் வென்றன.

2014ஆம் ஆண்டும் 73 தொகுதிகளில் பாஜக வென்று சாதனை படைத்திருந்தது. முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி வெறும் 5 தொகுதிகளில்தான் வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ரே பரேலி, அமேதி தொகுதிகளில்தான் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.