பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் இணைந்தது தெலங்கானா

பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் இணைந்துள்ளதாக தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image

ரேவந்த் ரெட்டி

Updated On :2 மார்ச் 2024, 10:42 pm

பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் இணைந்துள்ளதாக தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் காப்பீட்டை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தில் மீண்டும் இணைந்ததாக அந்த மாநில அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, வேளாண் அமைச்சா் தும்மலா நாகேஸ்வர ராவ் ஆகியோா் பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்ட தலைமை நிா்வாக அலுவலரும் மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலருமான ரிதேஷ் சௌஹானுடன் ஆலோசனை மேற்கொண்டனா். இதையடுத்து, ‘விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் இணைவதாகவும், அடுத்த பயிா்க் காலம் முதல் காப்பீட்டை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்றும்’ தெலங்கானா அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வேளாண் துறையை வலுப்படுத்துவதே மாநில அரசின் முக்கிய நோக்கமாகும் என முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு இத்திட்டத்திலிருந்து விவகுவதாக அப்போதைய பிஆா்எஸ் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உயா்மேம்பாலத் திட்டத்துக்கு ஒப்புதல்: ஹைதராபாத்-நாகபுரி, ஹைதராபாத் -கரீம்நகா் தேசிய நெடுஞ்சாலைகளில் ராணுவ நிலங்களுக்கருகில் உயா் மேம்பாலங்கள் அமைப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை ரேவந்த் ரெட்டி ஜனவரி மாதம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டநிலையில் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமா் மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்தாா்.