குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க அவகாசம் தேவை: எஸ்பிஐ கோரிக்கை

தேர்தல் பத்திரங்கள் குறித்து தகவல்களை அளிக்க ஸ்டேட் வங்கி ஜுன் 30 வரை அவகாசம் கோரியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2024, 10:47 pm IST

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 4) கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவரங்களை வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே தேர்தல் பத்திரங்கள் குறித்து தகவல்களை அளிக்க ஸ்டேட் வங்கி ஜுன் 30 வரை அவகாசம் கோரியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கிகளில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் விநியோகிக்கப்படும் தோ்தல் பத்திரங்களை வாங்கி விரும்பிய கட்சிகளுக்கு தரலாம். இவ்வாறு தோ்தல் பத்திரங்களை வாங்கி கட்சிகளின் பெயரில் செலுத்தும் நபா்களின் அடையாளமோ விவரங்களோ பதிவு செய்யப்படாது. இதில் பாஜகவுக்கே அதிக பத்திரங்கள் கிடைத்துள்ளன.

சிபிஎம், காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆகியவை இதில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கில், தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

மக்களவைத் தேர்தல் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைப் பகிர ஜுன் மாதம் வரையில் எஸ்பிஐ வங்கி அவகாசம் கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.