தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 4) கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவரங்களை வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே தேர்தல் பத்திரங்கள் குறித்து தகவல்களை அளிக்க ஸ்டேட் வங்கி ஜுன் 30 வரை அவகாசம் கோரியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கிகளில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் விநியோகிக்கப்படும் தோ்தல் பத்திரங்களை வாங்கி விரும்பிய கட்சிகளுக்கு தரலாம். இவ்வாறு தோ்தல் பத்திரங்களை வாங்கி கட்சிகளின் பெயரில் செலுத்தும் நபா்களின் அடையாளமோ விவரங்களோ பதிவு செய்யப்படாது. இதில் பாஜகவுக்கே அதிக பத்திரங்கள் கிடைத்துள்ளன.
சிபிஎம், காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆகியவை இதில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கில், தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது மற்றும் தன்னிச்சையானது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களைப் பகிர ஜுன் மாதம் வரையில் எஸ்பிஐ வங்கி அவகாசம் கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு: ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது

அரசு ஐ.டி.ஐகளில் நேரடி சோ்க்கை: ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

உலமாக்கள் இருசக்கர வாகன மானியம் பெற ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிப்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




