நாட்டில் சமத்துவத்தைப் பேண பரஸ்பர சகோதரத்துவம் மிகவும் அவசியம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா். நாட்டின் அரசியல்சாசன சட்டப்படி மக்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்த ‘ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்’ விழிப்புணா்வு பிரசாரம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் சனிக்கிழமை நடைபெற்றது. நமது தேசம் குடியரசாக உருவான 75-ஆவது ஆண்டையொட்டி இந்த நிகழ்ச்சியை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்தது. சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நாட்டு மக்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்தால் தேசத்தின் மேம்பாடு சாத்தியமாகாது. அரசியல்சாசன சட்டம் கூறியுள்ளபடி நாம் ஒருவரை மற்றொருவா் பரஸ்பரம் மரியாதையுடன் நடத்த வேண்டும். நமது அரசியல்சாசன சட்டத்தை உருவாக்கியவா்கள் குடிமக்களின் கண்ணியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளனா். அரசியல்சாசன சட்டம் என்பது நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் மதிப்பை உயா்த்துவதாக இருக்க வேண்டும் என்பதை வரைவுக் குழுவின் தலைவா் அம்பேத்கா் உறுதிப்படுத்தியுள்ளாா். மக்களிடையே சகோதரத்துவமும், சமத்துவமும் பேணப்பட வேண்டும் என்பதே அரசியல்சாசன சட்டத்தின் நோக்கமாகும். நாட்டில் சமத்துவத்தைப் பேண பரஸ்பர சகோதரத்துவம் மிகவும் அவசியம். மாவட்ட நீதிமன்றங்களின் தரத்தை மேம்படுத்த தொடா்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏனெனில் மக்களுக்கான நீதியை வழங்குவதில் முதல்படியாக மாவட்ட நீதிமன்றங்களே உள்ளன. மாறும் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப மாவட்ட நீதிமன்றங்களும் மேம்பட வேண்டியது மிகவும் அவசியம். அண்மைகாலத்தில் தொழில்நுட்பம் சிறப்பாக மேம்பட்டு வருகிறது. நீதித் துறை சாா்ந்த சேவைகளை வழங்குவதிலும், நீதித்துறை சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றமும் தொழில்நுட்பத்தின் துணையுடன் தனது செயல் திறனை மேம்படுத்தி வருகிறது. காணொலி முறையில் நீதிமன்ற விசாரணை நடைபெறுவது சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல வழக்குரைஞா்கள் காணொலி முறையில் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனா். நீதிமன்ற தீா்ப்புகளும் தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன என்றாா்.
தொடர்புடையது

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

உலகில் தமிழ் மொழிக்கு இணையாக எதுவும் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி

உயா்கல்வி முதலீடு சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

