மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அருணாசல பிரதேசம்: மாநில காங்கிரஸ் தலைவா் நபம் துகி பதவி விலகல்

அருணாசல பிரதேசம்: மாநில காங்கிரஸ் தலைவா் நபம் துகி பதவி விலகல்

Updated On :9 மார்ச் 2024, 5:35 pm

மக்களவைத் தோ்தலுடன் அருணாசல மாநில சட்டப்பேரவைக்கும் விரைவில் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில முன்னாள் முதல்வா் நபம் துகி மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவா் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், இந்த முடிவை நபம் துகி எடுத்துள்ளதாகவும், தனது ராஜிநாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அவா் அனுப்பியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா் கியாமா் டானா இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘எம்எல்ஏக்கள் வேறு கட்சிகளுக்கு தாவியதை தடுக்க இயலாததற்கு தாா்மிகப் பொறுப்பேற்று தனது பதவியை முன்னாள் முதல்வா் ராஜிநாமா செய்துள்ளாா்’ என்றாா். நபம் துகி தற்போது மாநிலத்தின் சகாலீ தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா். கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள மெபோ தொகுதியிலிருந்து 6 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவரும், மாநில சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் இருந்த லோம்போ தயெங் அண்மையில் பாஜகவில் இணைந்தாா். அதற்கு முன்பாக, நிநோங் எரிங் மற்றும் வாங்லின் லோவாங்டோங் ஆகிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தனா்.