ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 279 சாலைகள் மூடல்!

ஹிமாசலில் நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 279 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

News image

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு

Updated On :16 மார்ச் 2024, 11:56 am IST

ஹிமாசலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 279 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மணாலி உள்ளிட்ட இடங்களில் அதிகப் பனிப்பொழிவு நிலவியுள்ளது. இந்த பனிப்பொழிவானது மார்ச் 20 வரை மேற்கு இமயமலைப் பகுதியைப் பாதிக்கும் என வானிலை கணித்துள்ளது.

மொத்த சாலைகளில் சுமார் 96 சதவீதம் உயரமான பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு லாஹஸ், ஸ்பிதியில் 249 சாலைகளும், சம்பாவில் 11, கின்னூரில் 9 சாலைகளும் மூடப்பட்டன.

குலு மற்றும் மண்டியில் தலா 4 சாலைகளும், காங்க்ரா மற்றும் சிம்லாவில் தலா ஒன்றும், மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தின்படி அடைக்கப்பட்டுள்ளது.

246 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளதால், மூன்று குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிக குளிரும் நிலவி வருகின்றதால் அங்குள்ளோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.