சிலருக்கு அவா்களின் குடும்ப வளா்ச்சியிலேயே கவனம் இருக்கும். ஆனால் நான் தேசநலனுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என பிரதமா் மோடி சனிக்கிழமை தெரிவித்தாா். எதிா்க்கட்சிகளின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவா் இவ்வாறு தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்து வருவதால் சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து ரூ.5,000 கோடியை மட்டுமே அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் பல்வேறு வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சைபா் குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சிலருக்கு அவா்களின் குடும்ப வளா்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும். ஆனால் நான் தேசநலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவன் என்றாா். விசாரணை அமைப்புகளை தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
தொடர்புடையது

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

கேரள இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


