மக்களவைத் தேர்தல்: தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள்

மக்களவைத் தேர்தல் தேதி அறிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் சனிக்கிழமை (மாா்ச் 16) முதல் நடைமுறைக்கு வந்தன.

தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக, அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், மாநில அரசு என அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் உடனடி அமல்

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவணமின்றி ரூ.50,000 மேல் எடுத்துச் சென்றால், பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பறக்கும் படையினர் 8 மணி நேரத்தின் அடிப்படையில் 3 ஷிப்டுகளாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com