புது தில்லி: பூடானில் மோசமான வானிலை காரணமாக அந்நாட்டுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு மாற்று தேதிகள் அறிவிக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ அளிக்கும் கொள்கையின்கீழ் பூடான் நாட்டுக்கு பிரதமா் மோடி மாா்ச் 21, 22 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தாா். இந்நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பரோ நகர விமான நிலையம் அருகே மோசமான வானிலை நிலவுவதால் இருதரப்பினரின் பரஸ்பர ஒப்புதலோடு பிரதமரின் பூடான் நாட்டு அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதிகள் குறித்த அறிவிப்பு இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி மற்றும் அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும் பூடான் நாட்டுக்கு வருகை புரியுமாறு பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்திருந்தாா்.
தொடர்புடையது

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

பிரான்ஸில் அமெரிக்கா - சீனா வா்த்தக பேச்சு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


