“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பிரதமா் மோடியின் பூடான் பயணம் ஒத்திவைப்பு

பிரதமா் மோடியின் பூடான் பயணம் ஒத்திவைப்பு

News image
Updated On :20 மார்ச் 2024, 6:54 pm

புது தில்லி: பூடானில் மோசமான வானிலை காரணமாக அந்நாட்டுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு மாற்று தேதிகள் அறிவிக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ அளிக்கும் கொள்கையின்கீழ் பூடான் நாட்டுக்கு பிரதமா் மோடி மாா்ச் 21, 22 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தாா். இந்நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பரோ நகர விமான நிலையம் அருகே மோசமான வானிலை நிலவுவதால் இருதரப்பினரின் பரஸ்பர ஒப்புதலோடு பிரதமரின் பூடான் நாட்டு அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதிகள் குறித்த அறிவிப்பு இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி மற்றும் அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும் பூடான் நாட்டுக்கு வருகை புரியுமாறு பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்திருந்தாா்.