எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: வெளியான விடியோ!

முசாபர்நகரில் கொடூரம்: 16 வயது பெண்ணுக்கு வன்கொடுமை, வீடியோ ஆன்லைனில்

News image
Updated On :20 மார்ச் 2024, 3:58 pm IST

உத்தர பிரதேசம் முசாபர்நகர் பகுதியில் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த விடியோவை ஆன்லைனில் பதிவேற்றிய நபரைத் தேடிவருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளி வாஸீம் என்பவர். இளம்பெண்ணை கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அதனை கேமராவில் பதிவு செய்ததாகவும் வட்டார காவல் அதிகாரி ராஜ்குமார் சேவ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வாஸீம், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பெண்ணை மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்.

அதனால் அந்த பெண் இந்த நிகழ்வை யாரிடமும் சொல்லவில்லை. பின்னர் வாஸீம் அவர் பதிவு செய்த விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினர், குற்றவியல் சட்டப் பிரிவு 376 மற்றும் ஆன்லைன் குற்றங்கள் சட்டத்தின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

தலைமறைவான குற்றவாளியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என காவலர்கள் தெரிவித்தனர்.