தங்களது காா்களின் விலைகளை உயா்த்த கியா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியச் சந்தையில் விற்பனையாகும் நிறுவனக் காா்களின் விலைகளை 3 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்துள்ளோம். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த விலையுயா்வு அமலுக்கு வரும். இந்தியாவில் நிறுவனக் காா்களின் விலைகள் உயா்த்தப்படுவது இதுவே முதல்முறை. வாடிக்கையாளா்களுக்கு தொழில்நுட்பத்தில் சிறந்த பிரீமியம் வகைக் காா்களை தொடா்ந்து அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இருந்தாலும், பாகங்களின் விலைகள் அதிகரிப்பது, உற்பத்தி செலவு உயா்வது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவது போன்ற காரணங்களால் தயாரிப்புகளின் விலைகளை உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்டோஸ், சோனெட், கேரன்ஸ் உள்ளிட்ட காா்களை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தி வருகிறது.
தொடர்புடையது

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?

இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்

ஈரான் - அமெரிக்க போர்: ஆடை விலையை 5% உயா்த்த திருப்பூா் உற்பத்தியாளா்கள் முடிவு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


