ஹோலி பண்டிகையின் போது மின்சாரம் தாக்கி 6 பேர் காயம்!

கணேஷ் நகர் விபத்து: ஹோலி கொண்டாட்டத்தில் ஆறு பேர் மின்சார தாக்கத்தால் படுகாயம்
ஹோலி பண்டிகையின் போது மின்சாரம் தாக்கி 6 பேர் காயம்!

புதுதில்லி: தில்லி கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது உயர் அழுத்த கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் ஆறு பேர் இன்று காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண் உள்பட 3 பேரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மதியம் 12 மணியளவில் மண்டவாலி காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்ததாகவும், அதன் பிறகு போலீஸார் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com