பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (மார்ச் 27) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தில்லியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மக்களவைத் தொகுதியில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.