பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஹோலி கொண்டாட்டத்தில் பலியான நபர்: என்ன காரணம்?

முன்விரோதம் காரணமாக ஹோலி விழாவில் ஒருவர் உயிரிழப்பு

News image
மாதிரி படம்- IANS
Updated On :26 மார்ச் 2024, 9:42 am

DIN

உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஒருவர் பலியாகியதாக செவ்வாய்கிழமை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நபரைத் தாக்கி கொன்றவர்கள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் எனவும் முன்விரோதம் காரணமாக அவர்கள் இதனை செய்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

35 வயதான் சூரஜ்பால் என்பவர் பலியாகியுள்ளார். ஹோலி கொண்டாட்டத்தின்போது லக்பத் சிங் என்பவருக்கும் இவருக்கும் சண்டை உருவாகியுள்ளது.

குடும்பங்களிடையே இருந்த பழைய விரோதத்தால் மோதல் உருவாகியதாகவும் லக்பத் சிங் என்பவர் தர்மேந்திரா, தினேஷ் ஆகியோர் உதவியுடன் செங்கல் மற்றும் இரும்பி கம்பிகள் கொண்டு சூரஜ்பாலை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பலத்த காயம்பட்ட சூரஜ்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.