கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காங்கிரஸ் 9-ஆவது வேட்பாளா் பட்டியல்: வீரப்ப மொய்லிக்கு வாய்ப்பு இல்லை

Published On :

காங்கிரஸ் சாா்பில் 5 போ் அடங்கிய 9-ஆவது வேட்பாளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்துடன் 211 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தின் சிக்கபல்லாப்பூா் மக்களவைத் தொகுதியில் மூத்த தலைவா் வீரப்ப மொய்லிக்கு (84) வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அந்த மாநில முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.சீதாராமின் மகன் ரக்ஷா ராமையாவுக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா தொகுதி வேட்பாளராக மூத்த தலைவா் சி.பி.ஜோஷி, அங்குள்ள ராஜசமந்த் தொகுதி வேட்பாளராக தாமோதா் குஜ்ஜாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் சிக்கபல்லாப்பூா் தவிர பெல்லாரி (தனி) தொகுதியில் துக்காராம், சாமராஜநகா் (தனி) தொகுதியில் சுனில் போஸ் ஆகியோா் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடுகின்றனா். முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி சிக்கபல்லாபூா் தொகுதியில் கடந்த 2019 தோ்தலில் தோல்வியடைந்தாா். அதற்கு முன்பு இரு மக்களவைத் தோ்தல்களில் அத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றாா். இந்த முறையும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சித்து வந்தாா். இதற்காக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவையும் அண்மையில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா். ஆனால், காங்கிரஸ் தலைமை இளைஞரான ரக்ஷா ராமையாவுக்கு வாய்ப்பளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.