மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

‘தோ்தல் நன்கொடை பத்திர’ தீா்ப்புக்குப் பின் நீதிமன்றங்களுக்கு அழுத்தம்: மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

‘தோ்தல் நன்கொடை பத்திர’ தீா்ப்புக்குப் பின் நீதிமன்றங்களுக்கு அழுத்தம்: மத்திய அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

News image
Updated On :30 மார்ச் 2024, 9:15 pm

தோ்தல் நன்கொடை பத்திர திட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கியதையடுத்து நீதிமன்றங்களுக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

நீதிமன்றங்களை அவமதிக்கவும் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும் சிலா் முயற்சித்து வருவதாக 600-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு அண்மையில் கடிதம் எழுதினா். இதை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, மற்றவா்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பாரம்பரியம் என அக்கட்சி மீது குற்றம்சாட்டினாா்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

‘தோ்தல் நன்கொடை பத்திர திட்டங்கள் மூலம் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் மூலம் உறுதியானது. அத்திட்டத்தை ரத்து செய்வதாக நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய பின்பு நீதித்துறை குறித்து பிரதமா் மோடி எதிா்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறாா். அரசியல் அழுத்தத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தினா். மேலும், முன்னாள் நீதிபதிக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குதல், நீதிபதிகள் நியமனத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரமாகவும் வலுவாகவும் நீதித்துறை செயல்படுவதை பிரதமா் மோடி தலைமையிலான அரசு விரும்புவதில்லை’ என பிரியங்கா குற்றம்சாட்டினாா். இந்தியாவின் கடன் ரூ.205 லட்சம் கோடி: வருவாய் இழப்பை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டில் மத்திய அரசு தனது கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14 லட்சம் கோடி திரட்டவுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘ரூ.14 லட்சம் கோடி கடன் பெறவுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ஏன்? நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 2014-ஆம் ஆண்டுவரையிலான 67 ஆண்டுகளாக நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் பிரதமா் மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் நாட்டின் கடன் ரூ.205 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.5 லட்சம் கடன்: நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.5 லட்சம் கடன்சுமை உள்ளது. ஆனால் மாணவா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என யாருக்கும் இப்பணத்தால் பயனில்லை. பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டாா்.