வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

வணிகரின் தற்கொலைக்கு கடன் வட்டி காரணமா?

News image
Updated On :1 மே 2024, 9:48 am

DIN

கடனளித்தவர்கள் அதிக வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததால் அகமதாபாத்தைச் சேர்ந்த வணிகர் தற்கொலை செய்து இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கஜேந்திரசிங் ஜடேஜா என்பவர் 2001-ல் சிறியளவில் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

கடந்த வருடங்களில் அதற்கு பதிலீடாக ரூ.80 ஆயிரம்- பல தவணைகளில் நிலத்தை விற்று செலுத்திய போதும், ரூ.5 லட்சம் இன்னும் தர வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விரக்தியால் ஜடேஜா கூர்மையான ஆயுதம் கொண்டு தன்னைத் தானே காயப்படுத்தி இறந்துள்ளார்.

இதனையடுத்து காவலர்கள், கடன் தொல்லை கொடுத்த மூவரில் இருவரைக் கைது செய்துள்ளனர்.

இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.