தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

தில்லியில்கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு
தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

தில்லியின் கன்னௌட் பகுதியில், கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் அப்பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து பையை சோதனை செய்து, அதில் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, தில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததால் பதற்றம் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com