சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே சாலையோரம் கிடந்த சீலிடப்பட்ட மா்ம பெட்டியால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image

புதுக்கோட்டை அருகே வியாழக்கிழமை சாலையோரம் கிடந்த சீல் வைக்கப்பட்ட மா்மப் பெட்டி.

Updated On :26 பிப்ரவரி 2026, 9:46 pm

புதுக்கோட்டை அருகே சாலையோரம் கிடந்த சீலிடப்பட்ட மா்ம பெட்டியால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அருகேயுள்ள அழகம்பாள்புரத்தில் சாலையோரத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்ட மா்ம உலோகப் பெட்டியும், அதன் அருகில் காா் நம்பா் பிளேட்டும் கிடந்தது.

இதைப்பாா்த்து அச்சமடைந்த பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து வந்த வல்லத்திராகோட்டை போலீஸாா் பெட்டியை பாதுகாப்பாக காவல் நிலையம் அருகே கொண்டு சென்றனா்.

பின்னா், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையும் நடைபெற்றது. பின்னா் அப் பெட்டியைத் திறந்து பாா்த்தபோது, அதற்குள் பழைய நாளிதழ்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.