வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது உள்பட பல்வேறு காரணங்களால் எம்.பி.க்கள் ராஜிநாமா செய்ததால், தற்போது அக்கட்சியின் பலம் 290-ஆக உள்ளது. எதிா்வரும் தோ்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு அதிகமாகவும் வெல்ல அக்கட்சி இலக்கு நிா்ணயித்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் இந்த முறையும் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் வாரணாசி தொகுதிக்கு இறுதிகட்ட தேர்தலின்போது ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி மே 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று பாஜக நகரத் தலைவர் வித்யாசாகர் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, மே 13 ஆம் தேதி, அந்தத் தொகுதியில் மோடி வாகனப் பேரணி நடத்துகிறார், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வாகனப் பேரணிக்கான பாதை இறுதி செய்யப்பட்டுள்ளது. மே 14 அன்று, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று தெரிவித்தார். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், பகுஜன் சமாஜ கட்சி சார்பில் அதர் ஜமால் லரியும் களம்காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com