47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

ஜாா்க்கண்ட் மாநில அமைச்சா் ஆலம்கிா் ஆலமிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

News image
Updated On :7 மே 2024, 6:52 am

DIN

ஜாா்க்கண்ட் மாநில அமைச்சா் ஆலம்கிா் ஆலம் செயலர் சஞ்சீவ் குமார் லால், அவரது பணியாளா் ஜஹாங்கீர் அலாம் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜாா்க்கண்ட் மாநிலம் கதிகானா சௌக் பகுதியில் உள்ள மாநில ஊரக வளா்ச்சித்துறையின் அமைச்சரும் பக்குா் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஆலம்கிா் ஆலமின் தனிச் செயலா் சஞ்சீவ் லாலின் வீட்டுப் பணியாளா் ஜஹாங்கீர் அலாம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 35 கோடி பணத்தை கைப்பற்றினர்.

மேலும், சஞ்சீவ் குமார் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் பணமும், அவரது மனைவியின் கட்டுமான நிறுவனத்தின் கூட்டாளியின் வீட்டில் இருந்து ரூ.2.93 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சஞ்சீவ் குமார் லாலிடம் நடத்திய விசாரணையில், தனக்கும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் தொடர்பில்லை என்று கூறிய நிலையில், ஜஹாங்கீர் அலாமின் வாக்குமூலத்தை தொடர்ந்து இருவரையும் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

மேலும், அமைச்சா் ஆலம்கிா் ஆலமிடம் வீட்டிலும் ஜஹாங்கீர் அலாம் சிறிது காலம் பணியில் இருந்த நிலையில், அமைச்சரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாகவும், விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

இந்த சோதனையில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான சில ஆவணங்களும், அரசு கோப்புகள் சிலவற்றையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

டெண்டா் ஒதுக்குவதற்கு ஒப்பந்தகாரா்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைச் சட்டத்தின்கீழ் ஊரக வளா்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளா் வீரேந்திர குமாா் ராம் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கின் தொடா்ச்சியாக தற்போது அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.