காஷ்மீரில் குத்வானி என்ற பகுதியில் தீவிரவாத அமைப்புத் தலைவர் பாசித் தர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குத்வானி என்ற பகுதியில் பாசித் தர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத்தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில், பதுங்கியிருந்த பாசித் தர் மற்றும் உடன் இருந்த அவரது கூட்டாளியும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் இயங்கி வந்த டிஆர்எஃப் எனும் தீவிர அமைப்பின் தலைவர் பாசித் தர் என்பதும், சில தீவிரவாத நடவடிக்கைகளில் இந்த அமைப்பின் சதிச்செயல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.