லண்டன் டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இளம் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் 2024-இன்படி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி(கேஐஐடி பல்கலைக்கழகம்) 168 ஆவது இடத்தையும், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட உயா்கல்வி நிறுவனங்களில் 11 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
20 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகமாக கருதப்படும் கேஐஐடி, பல ஐஐடிகள் உள்பட பல பழமை வாய்ந்த கல்வி நிறுவனங்களை விஞ்சியுள்ளது. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக கல்வித் தூண்களாக விளங்கிய மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்தச் சாதனை குறிப்பிடத்தக்கது.
டைம்ஸ் உயா்கல்வி நிறுவனம் இந்தத் தரவரிசைக்காக 50 ஆண்டுகள் பழமையான இளம் கல்வி நிறுவனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சா்வதேசக் கண்ணோட்டம், தொழில் துறை வருமானம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் உயா்கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, தரவரிசைப்படுத்தியது.
இதில் கலந்து கொள்வதற்காக கேஐஐடி பல்கலைக்கழக தரவரிசை குழுவினா் பல்கலைக்கழகத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான தரவுகளைச் சேகரித்து, சரியாகப் பகுப்பாய்வு செய்து, சமா்ப்பித்தனா்.
2023-ஆம் ஆண்டில் சமா்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 673-க்கும் மேற்பட்ட உலக அளவிலான இளம் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதில் 55 கல்வி நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. இவற்றில் கடந்த ஆண்டு தரவரிசையில், உலகளவில் 151-200-க்குள் இடம் பெற்றிருந்த கேஐஐடி பல்கலைக்கழகம், இந்த ஆண்டு உலகளவில் 168 ஆவது இடத்தையும், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட உயா்கல்வி நிறுவனங்களில் 11 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
சாதனை குறித்து நிறுவனர் அச்யுதா சமந்தா கருத்து தெரிவிக்கையில், தரவரிசையில் கேஐஐடி பல்கலைக்கழகத்தின் உயர்வு அதன் வலுவான கல்வி கட்டமைப்பு மற்றும் புதுமையான கல்வி நடைமுறைகளுக்கு ஒரு சான்றாகும். கல்விக்கான அதன் ஆற்றல்மிக்க அணுகுமுறைக்கு பல்கலைக்கழகம் தொடர்ந்து அங்கீகாரம் பெற்றுள்ளது, இது கல்வி கடுமையை மட்டுமல்ல, அதன் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியையும் வலியுறுத்துகிறது. இது முதன்மையாக பொறியியல் மற்றும் அறிவியலில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
"இந்த தரவரிசையானது கல்வியில் சிறந்து விளங்குவதற்கான எங்கள் இடைவிடாத முயற்சியின் பிரதிபலிப்பாகும். கேஐஐடி இல், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கும், எங்கள் மாணவர்களை உலகத் தலைவர்களாக ஆக்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." மேலும், இந்த உயரிய தரவரிசையில் பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்த அனைத்து ஆசிரியர்கள், அலுவலா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் ஊழியர்கள் அர்ப்பணிப்பும் முக்கியமானது என அவர் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசு உதவி: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்!

அவினாசிலிங்கம் மகளிா் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா

உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள்
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


