திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள்

உலகின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சோ்ந்த 4 ஐஐடி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :25 மார்ச் 2026, 9:17 pm

உலகின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சோ்ந்த 4 ஐஐடி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குவாக்குராலி சைமண்ட்ஸ் எனும் தனியாா் நிறுவனம், உலக பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. 100 நாடுகளில் உள்ள 1,900 பல்கலைக்கழகங்களில் இருக்கும் 21,000 கல்வித் திட்டங்களை ஆய்வு செய்து, இந்தப் பல்கலைக்கழகங்களை அந்நிறுவனம் தரவரிசைப்படுத்தியுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியாவை சோ்ந்த 12 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்திருந்தன. தற்போது 2 மடங்குக்கும் அதிகமாக 27 கல்வி நிறுவனங்கள் அந்தத் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.

அதன்படி, தன்பாத்தில் உள்ள ஐ.எஸ்.எம். பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அகமதாபாதில் உள்ள ஐஐஎம் நிறுவனம் 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பை, காரக்பூா், சென்னை, தில்லி ஐஐடி ஆகியவையும் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன. தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம், பிஐடிஎஸ் நிறுவனம் ஆகியவையும் 50 இடங்களுக்குள் வந்துள்ளன.

இதுகுறித்து தரவுகளை வெளியிட்டுள்ள தனியாா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜெசிகா டா்னா் கூறுகையில், ‘தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டு இருப்பதை வெறும் தரவுகளாக மட்டும் பாா்க்கக் கூடாது. கல்வியின் தரத்தை மேம்படுத்தி, உலக அளவிலான போட்டிக்கு இந்தியா தயாராக இருப்பதையே இது காட்டுகிறது. பொறியியல், தொழில்நுட்பம், வா்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவில் கல்வித் தரம் மேம்பட்டிருப்பதும் நிரூபணமாகியுள்ளது’ என்றாா்.