லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்!

News image
Updated On :15 மே 2024, 1:37 pm

DIN

காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினருக்காக அரசு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை ஒதுக்க விரும்பியதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை குற்றம் சாட்டினார். மேலும், மதத்தின் அடிப்படையில் வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

வடக்கு மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள பிம்பால்கான் பஸ்வந்த் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மஹாயுதி வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பாரதி பவார் (பாஜக), ஹேமந்த் கோட்சே (சிவசேனா) ஆகியோரை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது:

பட்ஜெட்டை மத அடிப்படையில் பிரிப்பது ஆபத்தானது.

அரசியலமைப்பின் தலைமை சிற்பியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், வேலை மற்றும் கல்வியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உறுதியாக இருந்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க திட்டம் தீட்டினர்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக எதிர்த்தது. ஆனால், அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறது.

அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர். ஆனால், காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி, ஓபிசிகளின் இடஒதுக்கீடு உரிமைகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகிறது.

மக்களவைத் தேர்தல், நாட்டு நலனுக்காக வலுவான முடிவுகளை எடுக்கும் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கானது.

கடந்த 10 ஆண்டுகளில், மத வேறுபாடின்றி இலவச ரேஷன், குடிநீர், மின்சாரம், வீடுகள் மற்றும் எரிவாயு இணைப்புகளை எனது அரசு வழங்கியுள்ளது என்றார் பிரதமர் மோடி.

சரத் பவாரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், மகாராஷ்டிரத்தை சேர்ந்த இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவருக்கு, காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைவது தெரியும்.

எனவே, சிறிய கட்சிகளை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.