குருகிராம்: ஹரியாணா மாநிலம் நூ வட்டம் டவுரு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 8 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா-பிருந்தாவனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹரியானா குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து நூ வட்டம் டவுரு அருகே திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டம் டாரு அருகே சாலையில் கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபது பேர் காயமடைந்தனர்.

ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள டாரு அருகே சனிக்கிழமை அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் இருபது பேர் காயமடைந்தனர்.
பேருந்து தீப்பற்றி எரிவதைக் கண்ட அந்த பகுதி மக்கள், பேருந்தை துரத்திச் சென்று ஓட்டுநரை பேருந்தை நிறுத்தச் சொல்லிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில், பேருந்தில் இருந்தவர்களில் 8 பேர் தீயில் கருகி பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பேருந்து தீப்பிடித்தற்கான காரணம் இதுவரை தெரியில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்

தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீா் தீ விபத்து

ம.பி.யில் புலி தாக்கியதில் பெண் பலி, 4 பேர் காயம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




