12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உ.பி.யில் துணை ஆய்வாளரை தாக்கிய பா.ஜ.க.வினர் 4 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் துணை ஆய்வாளரை தாக்கி சீருடையை கிழித்த வழக்கில் பாஜக தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published On :

உத்தரப் பிரதேசத்தில் துணை ஆய்வாளரைத் தாக்கி, சீருடையைக் கிழித்த வழக்கில் பாஜக தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலாஜிபுரம் நெடுஞ்சாலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சந்திப்பில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் துணை ஆய்வாளர் சேத்தன் பரத்வாஜ் மற்றும் ஒரு காவலரிடம் பாஜக தலைவர் தினேஷ் குமார், துணை ஆய்வாளர் பரத்வாஜிடம் சீருடையின் காலரைப் பிடித்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறுகையில், ”பாலாஜிபுரம் வார்டு கவுன்சிலரின் கணவரான தினேஷ் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது நீரஜ் என்ற நபரின் கார் மோதியுள்ளது. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் முற்றியது. தகவல் கிடைத்ததும், பரத்வாஜ் மற்றும் காவலர் சம்பவ இடத்திற்கு வந்தபோது,​​ தினேஷ் குமாரும் அவரது உதவியாளர்களும் துணை ஆய்வாளரின் சீருடை காலரை பிடித்து தாக்கியுள்ளனர்” என்றார்.

பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்து, பாஜக தலைவர் மற்றும் அவரது மூன்று உதவியாளர்களை கைது செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்த பிறகு, வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.